ஆப்கானித்தானில் நேட்டோ வான் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டனர்

ஞாயிறு, மே 27, 2012

ஆப்கானித்தானின் கிழக்கு மாகாணமான பாக்த்தியாவில் நேட்டோ படையினர் வான் தாக்குதல் நடத்தியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


நேற்று சனிக்கிழமை சூரி காயில் என்ற கிராமத்தில் இடம்பெற்ற இத்தாக்குதலில் ஆறு குழந்தைகளும் அவர்களது பெற்றோரும் கொல்லப்பட்டனர். இத்தகவல் குறித்து தாம் விசாரித்து வருவதாக நேட்டோ அறிவித்துள்ளது. தாக்குதலில் இறந்தவர்கள் தலிபான்களுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாதவர் என மாகாண அரசுப் பெச்சாளர் ரொகுல்லா சமூன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


முன்னதாக, நேற்று சனிக்கிழமையன்று இடம்பெற்ற இரு வெவ்வேறு குண்டுத் தாக்குதல்களில் நான்கு நேட்டோ படையினர் கொல்லப்பட்டனர்.


மூலம் தொகு