பாக்கித்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி பதவியில் நீடிக்க உச்ச நீதிமன்றம் தடை
புதன், சூன் 20, 2012
- 17 பெப்ரவரி 2025: இசுலாமாபாத் முற்றுகையை முறியடிக்க இராணுவம் வரவழைப்பு
- 17 பெப்ரவரி 2025: ஆப்காத்தானில் அமெரிக்கா அனைத்து குண்டுகளின் தாய் எனப்படும் பெரும் வெடிகுண்டை போட்டது
- 17 பெப்ரவரி 2025: பள்ளிவாசல் தாக்குதலை தொடர்ந்து பாக்கித்தான் 100இக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்றது
- 17 பெப்ரவரி 2025: பாக்கித்தானில் காவலர் பயிற்சி கல்லூரியை மூன்று தற்கொலை தாரிகள் தாக்கியதில் பலர் பலி
- 17 பெப்ரவரி 2025: பாக்கித்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா ஊடுறுவி தாக்கியது
பாக்கித்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி பிரதமர் பதவியில் நீடிக்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க ஆளும் பாக்கித்தான் மக்கள் கட்சி இன்று புதன்கிழமை கூடுகிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பை தான் ஏற்றுக்கொள்வதாக பாக்கித்தான் மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவை அடுத்து பாக்கித்தான் சனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உருசியாவுக்கான தனது பயணத்தை இடைநிறுத்தியுள்ளார். சனாதிபதிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான வழக்குகளை மீண்டும் விசாரிப்பதற்கு கிலானி மறுத்தததை அடுத்து கிலானிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றம் இரண்டு மாதங்கள் முன்பு அவர் மீதான குற்றத்தை உறுதி செய்து, கிலானிக்கு நீதிமன்றம் கலையும் வரையான தடுப்புக்காவலை விதித்தது.
"'மேன்முறையீட்டு மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே சயீட் யூசுப் ரசா கிலானி, மஜ்லிஸ் ஈ சூரா (நாடாளுமன்ற) அங்கத்தவராக பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர்'" என பிரதம நீதியரசர் இப்திகார் அலி சௌத்திரி நீதிமன்றத்தில் அறிவித்தார். "அவர் பிரதமர் பதவியிலிருந்தும் ஓய்வுபெற்றுள்ளார். தற்போது பிரதமர் பதவி வெற்றிடமாகவுள்ளது" எனவும் பிரதம நீதியரசர் தெரிவித்தார்.
பாக்கித்தானில் அரசியல்வாதிகளுக்கும் நீதித்துறைக்கும் இடையே நடந்துவரும் கடுமையான மோதல்களின் தொடர்ச்சியே நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
மூலம்
தொகு- Pakistan People's Party meets to appoint a new PM, பிபிசி, சூன் 20, 2012
- Pakistan to elect new PM on Friday, ஹூஸ்டன் குரோனிக்கில், சூன் 20, 2012