இந்தோனேசியா கடல் பகுதியில் நில நடுக்கம்

வியாழன், மார்ச்சு 3, 2016

இந்தோனேசியா அருகில் அமைந்துள்ள சுமத்திரா தீவிலிருந்து 100 கிலோமீட்டர்கள் தொலைவில் கடலுக்கடியில் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.9 எனப் பதிவானது. இந்த நில நடுக்கம் இந்திய நேரப்படி 02 மார்ச் மாலை 6.20 நிமிடத்தின் போது நடந்தது. இதன் காரணமாக முதலில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டது.


மூலம் தொகு