இந்தோனேசியாவில் கடலுக்கடியில் 7.1 அளவு நிலநடுக்கம்
வியாழன், திசம்பர் 10, 2015
இந்தோனேசியாவில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: இந்தோனேசியா கடல் பகுதியில் நில நடுக்கம்
- 17 பெப்ரவரி 2025: இந்தோனேசியாவில் கடலுக்கடியில் 7.1 அளவு நிலநடுக்கம்
- 17 பெப்ரவரி 2025: இத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது
- 17 பெப்ரவரி 2025: இந்தோனேசியாவின் ஏர்ஏசியா வானூர்தி இக்யு.இசட் 8501 162 பேருடன் மறைந்தது
- 17 பெப்ரவரி 2025: இந்தோனேசியாவின் அரசுத்தலைவர் தேர்தலில் ஜோக்கோ விடோடோ வெற்றி
இந்தோனேசியாவின் அமைவிடம்
இந்தோனேசியாவின் கிழக்கே நேற்று புதன்கிழமை ரிக்டர் அளவில் 7.1 நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலவியல் ஆய்வுமையம் அறிவித்தது.
இந்நிலநடுக்கம் இந்தோனேசியாவின் கிழக்கே சுமார் 174 கிலோமீட்டர் (108 மைல்) தொலைவிலுள்ள பந்தா, அம்பொன் தீவுப் பகுதியில் கடலடியில் 75 கிலோமீட்டர் (47 மைல்) ஆழத்தில் நிகழ்ந்தது.
இந்நிலநடுக்கத்தின்போது அப்பிராந்தியத்தின் கட்டிடங்கள் குலுங்கியதால் பெரும்பாலான மக்கள் பீதியடைந்தனர், எனினும் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு ஆழிப்பேரலை (சுனாமி) எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை, அதேவேளையில் இந்நிலநடுக்கத்தால் எவ்வொரு பாதிப்பும் இல்லையென்பதே மூலத்தகவலாக அறியப்பட்டது.
இந்தோனேசியா பசிபிக் எரிமலை வளையத்தில் காணப்படுவதால் இங்கு நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.
மூலம்
தொகு- Earthquake Of 7.1 Magnitude Off Indonesia's Ambon Island: US Geological Survey, என்டிடிவி, டிசம்பர் 9, 2015
- Earthquake of 7.1 magnitude off Indonesia's Ambon island: USGS, ராய்ட்டர்சு, டிசம்பர் 9, 2015
- இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம், தினபூமி, திசம்பர் 9, 2015