50 நாட்களாக பசிபிக் கடலில் காணாமல் போயிருந்த 3 சிறுவர்கள் உயிருடன் மீட்பு
வியாழன், நவம்பர் 25, 2010
- 17 பெப்ரவரி 2025: இந்தியத் துடுப்பாட்ட அணித் தலைவர் டோனி, ஒருநாள் போட்டிகளில் 8,000 ஓட்டங்களைக் கடந்தார்
- 17 பெப்ரவரி 2025: நியூசிலாந்தில் 6.5 அளவு நிலநடுக்கம், நாடாளுமன்றம் சேதம்
- 17 பெப்ரவரி 2025: நியுசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி அலை தாக்கியது
- 17 பெப்ரவரி 2025: நியூசிலாந்துத் தலைநகர் வெலிங்டனை இரண்டு பெரும் நிலநடுக்கங்கள் தாக்கின
- 17 பெப்ரவரி 2025: 115 ஆண்டுகளின் பின்னர் நியூசிலாந்தின் டொங்காரிரோ எரிமலை வெடித்தது
50 நாட்களாகக் பசிபிக் பெருங்கடலில் காணாமல் போயிருந்த டோக்கெலாவ் தீவுகளைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இவர்கள் மூவரும் இறந்து விட்டதாகக் கருதி அவர்களுக்கு இறுதிக் கிரியைகளும் இடம்பெற்று விட்ட நிலையில் மூவரும் பிஜித் தீவின் அருகே நேற்று புதன்கிழமை மாலை மீன்பிடிப் படகொன்றினால் கண்டுபிடிக்கப்பட்டனர். மூவரும் இப்போது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். டோக்கெலாவ் தீவுகள் நியூசிலாந்தின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசம் ஆகும்.
இச்சிறுவர்களில் இருவர் 15 உம் மற்றவர் 16 14 வயதினையும் உடையவர்கள். அக்டோபர் 5 ஆம் நாள் இவர்கள் அட்டாபு திடலில் இடம்பெற்ற ஆண்டுக் களியாட்ட விழாவில் கலந்து கொண்டு விட்டு சிறிய அலுமீனியம் படகில் வீடு திரும்புகையில் காணாமல் போனார்கள்.
நியூசிலாந்து வான்படையினர் இவர்களைத் தேடிய போது அவர்கள் அகப்படவில்லை.
"மூவரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள், கடும் வெப்பம் காரணமாக உடல் எங்கும் சூரிய வெப்ப வடுக்கள் காணப்படுகின்றன," என இவர்களைக் காப்பாற்றிய மீனவர் டாய் பிரெடெரிக்சன் தெரிவித்தார்.
மூலம்
தொகு- Three boys adrift in Pacific for 50 days found alive, பிபிசி, நவம்பர் 25, 2010