பிரபாகரனின் பெற்றோர் சிவாஜிலிங்கத்திடம் ஒப்படைப்பு
சனி, சனவரி 9, 2010
இலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது
- 17 பெப்ரவரி 2025: இலங்கை அரசு நியமித்த நிபுணர் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்த்தப்படுகிறது
- 17 பெப்ரவரி 2025: 157 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களும் நவூரு தீவுக்கு அனுப்பப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: ஈழத் தமிழ் அகதிகள் 157 பேரும் கொக்கோசுத் தீவுக்கு அழைத்து வரப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: தஞ்சமடையச் சென்ற தமிழ் அகதிகளை ஆத்திரேலியா இலங்கைக்கு திருப்பி அனுப்பியது
இலங்கையின் அமைவிடம்
மறைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் மற்றும் அவரது மறைந்த தந்தையாரின் பூதவுடல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமான சிவாஜிலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்துள்ளார்.
பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை இராணுவப் பாதுகாப்பில் இருக்கும் போது மரணம் அடைந்தார் எனபதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
மறைந்த வேலுப்பிள்ளையின் பூதவுடல் வல்வெட்டித்துறை தீருவில்லில் இறுதிக்கிரியைகளை நடத்துவதற்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த இறுதி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தமிழ் நாட்டில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உட்பட மூன்று பிரமுகர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
தொடர்புள்ள செய்திகள்
தொகு- இராணுவக் காவலில் இருந்த பிரபாகரனின் தந்தை காலமானார், ஜனவரி 8, 2010
மூலம்
தொகு- Praba’s parents handed over to Sivaji, டெய்லி மிரர் இணையத்தளம், 9 ஜனவரி 2010
- வல்வெட்டித்துறையில் நாளை வேலுப்பிள்ளையின் தகனக் கிரியைகள், வீரகேசரி இணையம், 9 ஜனவரி 2010