நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமனுக்கு 'சர்' பட்டம்

ஞாயிறு, சனவரி 1, 2012

வேதியியலில் 2009 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளித் தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு 2012 புத்தாண்டையொட்டி பிரித்தானிய அரசாங்கத்தின் உயரிய சிவில் விருதான நைட்ஹுட் எனப்படும் சர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.


வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்

தமிழ்நாடு சிதம்பரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட வெங்கட்ராமன் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள மருத்துவ ஆய்வுக் கழகத்தில் உயிரியலாளராகப் பணியாற்றுகிறார்.ரைபோசோம்கள் செல்களுக்குள் புரதங்கள் உற்பத்தியாவது தொடர்பான ஆய்வினை மேற்கொண்டமைக்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.


2010 ஆம் ஆண்டில் இயற்பியலுக்காக நோபல் பரிசு பெற்ற உருசியாவில் பிறந்த ஆந்திரே கெயிம், கொன்ஸ்டண்டீன் நவசியோலொவ் ஆகியோருக்கும் சர் பட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன், ஐபேட் போன்றவற்றை வடிவமைத்தவரான ஜோனதன் ஐவிக்கும் சர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.


மூலம் தொகு