நேபாளத்தில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழப்பு
திங்கள், பெப்ரவரி 17, 2014
- 17 பெப்ரவரி 2025: நேபாள பகுதி எவரெசுடு மலையேற்றப் பாதையில் மாற்றம்
- 17 பெப்ரவரி 2025: நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 1500 பேர் உயிரிழப்பு
- 17 பெப்ரவரி 2025: நேபாளத்தில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழப்பு
- 17 பெப்ரவரி 2025: நேபாளத்தில் மீண்டும் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது
- 17 பெப்ரவரி 2025: புத்தர் பிறந்த இடத்தில் கிமு 6ம் நூற்றாண்டு காலக் 'கோவில்' கண்டுபிடிக்கப்பட்டது
நேபாளத்தின் மேற்கு மலைப் பகுதியில் பயணிகள் விமானம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைத்து 18 பேரும் கொல்லப்பட்டனர். இறந்த 18 பேரின் உடல்களும் இன்று மீட்கப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர்.
நேபாள ஏர்லைன்சு நிறுவனத்துக்குச் சொந்தமான கனடாவில் வடிவமைக்கப்பட்ட இச்சிறிய ரக விமானம் பொக்காரா என்ற சுற்றுலா நகரில் இருந்து புறப்பட்ட பின்னர் காணாமல் போனது. அர்ககாஞ்சி மாவட்டத்தில் மசினேலெக் என்ற மலைப்பகுதியில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இறந்தவர்களில் ஒருவர் டென்மார்க்கைச் சேர்ந்தவர். ஏனையோர் நேபாளிகள் ஆவர்.
மோசமான காலநிலையே விபத்துக்குக் காரணம் என விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2012 ஆம் ஆண்டில் நேபாளத்தில் இடம்பெற்ற இரண்டு விமான விபத்துகளில் 34 பேர் கொல்லப்பட்டனர்.
தொடர்புள்ள செய்திகள்
தொகு- நேபாள விமான விபத்தில் 13 இந்தியர்கள் உட்பட 15 பேர் உயிரிழப்பு, மே 14, 2012
- நேபாளத் தலைநகரில் பயணிகள் விமானம் தீப்பற்றி வீழ்ந்ததில் 19 பேர் உயிரிழந்தனர், செப்டம்பர் 28, 2012
மூலம்
தொகு- Nepal plane crash: Officials confirm 18 killed, பிபிசி, பெப்ரவரி 17, 2014
- Nepal plane crash in bad weather killed all 18 on board, ராய்ட்டர்சு, பெப்ரவரி 17, 2014