சிங்கப்பூரில் உலகின் முதலாவது அறிவுக்கலை அருங்காட்சியகம்
வியாழன், திசம்பர் 30, 2010
- 17 பெப்ரவரி 2025: பிஎசுஎல்வி ஏவுகலம் சிங்கப்பூரின் 6 செயற்கைக் கோள்களை ஏவியது
- 17 பெப்ரவரி 2025: சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ நுரையீரல் அழற்சி காரணமாக இறந்தார்
- 17 பெப்ரவரி 2025: லிட்டில் இந்தியா கலவரத்தில் ஈடுபட்ட 53 பேரை சிங்கப்பூர் நாடுகடத்துகிறது
- 17 பெப்ரவரி 2025: சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் கலவரம், ஒருவர் உயிரிழப்பு
- 17 பெப்ரவரி 2025: இந்தோனேசியக் காட்டுத்தீ: சிங்கப்பூர் புகை மூட்டத்தில் மூழ்கியது
உலகின் முதலாவது கலை அறிவியல் அருங்காட்சியகம் (ArtScience Museum) சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு பெப்ரவரி 17 ஆம் நாள் திறந்து வைக்கப்பட இருக்கிறது. மரீனா பே சாண்ட்ஸ் என்ற இடத்தில் இது அமைந்துள்ளது.

இந்த அருங்காட்சியத்தில் 50,000 சதுர அடி பரப்புள்ள 21 அரங்கங்கள் உள்ளன. இக்காட்சியகங்களில் கலையும் அறிவியலும், ஊடகத்துறையும் தொழில்நுட்பமும், மற்றும் வடிவமைப்பும் கட்டடக்கலையும் ஆகிய துறைகளில் பல காட்சிப் பொருட்கள் இடம்பெறும். அத்துடன் உலகம் முழுவதையும் சேர்ந்த அரிய பொருட்களைக் காண அருமையான வாய்ப்பாக இது திகழும் என்று மெரினா சேண்டஸ் நிறுவனம் தெரிவித்தது.
இங்கு வரும் பார்வையாளர்கள் உந்துதல், உத்வேகம், வெளிப்படுத்தல் ஆகிய மூன்று முக்கிய அரங்கங்களூடாக இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிடலாம். “அறிவுக்கலை: ஒரு புத்தாக்கப் பயணம்” என்ற நிரந்தர கண்காட்சியும் அங்கு இடம்பெறவிருக்கிறது. அத்துடன் உரைத் தொடர் ஒன்றையும் இந்த அருங்காட்சியம் தொடங்க இருக்கிறது. அறிவுக்கலைத் துறையில் உலகளாவிய அளவில் சிந்தனைச் சிற்பிகளை சிங்கப்பூருக்கு வரவழைத்து உரை நிகழ்ச்சிகளுக்கு அது ஏற்பாடு செய்யும்.
மூலம்
தொகு- World's first ArtScience Museum to open in February, டுடே ஒன்லைன், டிசம்பர் 30, 2010
- உலகின் முதல் அறிவுக்கலை அருங்காட்சியம் சிங்கப்பூரில், தமிழ்முரசு, டிசம்பர் 30, 2010