கவிஞர் வாலி காலமானார்
வெள்ளி, சூலை 19, 2013
தொடர்புள்ள செய்திகள்
- 14 பெப்பிரவரி 2025: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 14 பெப்பிரவரி 2025: பில்லியனர் தேவீது ராக்பெல்லர் தன் 101 வயதில் மறைந்தார்
- 14 பெப்பிரவரி 2025: போர்க்குற்றங்களுக்காக இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் வங்காளதேசத்தில் தூக்கிலிடப்பட்டனர்
- 14 பெப்பிரவரி 2025: அப்துல்கலாம் இயற்கை எய்தினார்
- 14 பெப்பிரவரி 2025: சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ நுரையீரல் அழற்சி காரணமாக இறந்தார்
கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான வாலி நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 82. கடந்த ஆறு வார காலமாக உடல்நலக் குறைவால், தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். அவரின் உடல்நிலை நேற்று மேலும் மோசமடைந்து மாலை 5.10 மணிக்கு உயிர் பிரிந்தது.
ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட வாலி திருவரங்கத்தில் பிறந்தவர். வாலி ஏறத்தாழ ஐந்து தசாப்தங்களாக தமிழ்த் திரையுலகில் முக்கியமானதொரு ஆளுமையாக விளங்கினார். பத்தாயிரம் பாடல்களுக்கும் மேல் எழுதியுள்ளார்.
2007ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்ற வாலி பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் மற்றும் அவதார புருஷன் போன்ற கவிதை நூல்களையும் படைத்துள்ளார்.
வாலியின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். வாலிக்கு பாலாஜி எனும் மகன் உள்ளார்.
மூலம்
தொகு- கவிஞர் வாலி மறைவு, தினமணி, ஜூலை 19, 2013
- முடிவுக்கு வந்த 60 ஆண்டு திரை சகாப்தம், தினமணி, ஜூலை 18, 2013
- திரைப்பட உலகில் நீடித்து நின்ற கவிஞர் வாலி மரணம்: இன்று இறுதி சடங்கு, தினமலர் , ஜூலை 18, 2013
- ‘ நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே., ’- சொன்னபடி வாழ்ந்து காட்டிய வாலி இன்று இல்லை, தினமலர் , ஜூலை 18, 2013
- Political leaders, film world condole Vaali’s death, தி இந்து, ஜூலை 19, 2013
- Lyricist Vaali leaves a void, தி இந்து, ஜூலை 18, 2013