லிபியாவின் தேசிய இடைக்காலப் பேரவைக்கு ஐ.நா அங்கீகாரம் வழங்கியது
திங்கள், செப்டெம்பர் 19, 2011
லிபியாவில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு
- 17 பெப்ரவரி 2025: கடலில் படகு மூழ்கி 90 பேர் மாயம்
- 17 பெப்ரவரி 2025: லிபியாவில் டிரக் வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது 47 பேர் பலி
- 17 பெப்ரவரி 2025: மத்திய தரைக்கடலில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் 700 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது
- 17 பெப்ரவரி 2025: நோயாளிகளை ஏற்றிச் சென்ற லிபிய விமானம் துனீசியாவில் விபத்துக்குள்ளாகியதில் 11 பேர் உயிரிழப்பு
லிபியாவின் அமைவிடம்
லிபியாவின் தேசிய இடைக்கால அரசுக்கு ஐ.நா அங்கீகாரம் அளித்துள்ளது. 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா பொதுக்குழுவில், கடாபி அரசை வீழ்த்திய லிபிய இடைக்கால அரசுக்கு ஐ.நா.வில் இடம் அளிப்பதற்கு ஆதரவாக 114 வாக்குகள் கிடைத்தன. எதிராக 17 வாக்குகள் கிடைத்தன. இந்தியா இடைக்கால அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது.
லிபியாவுக்கு எதிரான பொருளாதார மற்றும் ராணுவ ரீதியான தடைகளைக் களைய இந்நடவடிக்கை பயன்படும். இதன்மூலம் போரால் சீரழிந்த லிபியாவின் பொருளாதார மற்றும் அரசியல் மீட்பு சாத்தியப்படும். ஐக்கிய நாடுகளின் இம்முடிவை அமெரிக்காவும் பிரிட்டனும் வரவேற்றுள்ளன.
மூலங்கள்
தொகு- லிபியாவின் இடைக்கால அரசுக்கு ஐ.நா அங்கீகாரம் lankasri world, ஞாயிற்றுக்கிழமை, 18 செப்ரெம்பர் 2011, 05:16.14 மு.ப GMT