லண்டனில் பல்லின இசைக்குழுவின் இசைநிகழ்ச்சி

சனி, பெப்பிரவரி 22, 2014

பல்லின சமகால பாரம்பரிய இசைக்குழு (Ethnic Contemporary Classical Orchestra, எக்கோ) கிழக்கு லண்டனிலுள்ள வேத்தியர் விழா மண்டபத்தில் (Royal Festival Hall) நேற்று வெள்ளிக்கிழமை ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தியது. ரேச்சல் பாண்டின் இசைக்குழுவை வழிநடத்தினார். பிற்பகல் ஒரு மணிக்குத் தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் பல மொழிப் பாடல்கள் இசைக்கப்பட்டன.


கிழக்கு லண்டன் வேத்தியர் விழா மண்டபத்தில் இசை நிகழ்ச்சி

இதில் பல இன சமூகங்களைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் ஒன்று கூடி பலதரப்பட்ட வாத்தியங்களை வாசித்தனர்.


கருநாடக இசை வாத்தியமான மிருதங்கம் இந்த இசை நிகழ்ச்சியில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. காந்தன் என்ற லட்சுமிகாந்தன் தியாகராஜன் மிருதங்கம் வாசித்தார்.


எக்கோ இசைக்குழு 2009 ஆம் ஆண்டு மொரீசியோ வெனெகஸ்-அஸ்டோர்கா, ரேச்சல் பாண்டின் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இன்றைய இளைய சமுதாயத்தினரின் இசை அபிலாசைகளை பிரதிபலிக்கும் வகையில் பலதரப்பட்டதும் உள்ளடக்கக்கூடியதுமான ஒரு மாதிரி இளையவர் இசைக்குழுவை உருவாக்குவதே இவர்களின் குறிக்கோளாகும்.

மூலம் தொகு