சேலம் நடுவண் சிறை அலுவலகப் பணியாளர்களுக்கு தமிழ்க்கணிமைப் பயிலரங்கம்

செவ்வாய், மார்ச்சு 24, 2015

சேலம் நடுவண் சிறை அலுவலகப் பணியாளர்களுக்கு தமிழ்க்கணிமைப்பயிலரங்கம் மார்ச்சு 25, 2015இல் புதன்கிழமை அன்று நிகழ உள்ளது.

இப்பயிலரங்கம் சேலம் நடுவண் சிறையில் காலை 10.30 மணி முதல் தொடங்கி நிகழ உள்ளது. இப்பயிலரங்கின் வரவேற்புரையை சேலம் நடுவண் சிறையின் மனவியல் நிபுணர் உ. பாஸ்கரன், தமிழ்நாடு சிறைப்பணி வழங்க உள்ளார், தலைமையுரையை சேலம் நடுவண் சிறையின் சிறை அலுவலர் முருகேச முத்துராமலிங்கம் வழங்க உள்ளார், வரவேற்புரையை சேலம் நடுவண் சிறையின் மனநல ஆலோசகர் செல்வகுமார் வழங்க உள்ளார்.தமிழ்க்கணிமைப் பயிலரங்கினை பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல், மக்கள் தொடர்பியல் துறையின் பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி நடத்த உள்ளார், இப்பயிலரங்கின் நன்றியுரையை சேலம் நடுவண் சிறையின் மனநல ஆலோசகர் மார்ட்டின் விமல் ராஜ் வழங்க உள்ளார்.

இப்பயிலரங்கில் பயிற்சிகளை மக்கள் தொடர்பியல் துறையின் பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி மாணவர்களுக்கான நேரிடைப் பயிற்சியை வழங்க உள்ளார்.முதல் அமர்வில் தமிழ்க்கணிமை குறித்த அறிமுகம் அளிக்கப்பெறும். இவ்வமர்வில் தமிழ் ஒருங்குகுளிறி உள்ளீடு, தமிழ்க்கணிமையின் தேவை, வலைதளங்களில் தமிழ் மின்னாட்சி, தமிழ் ஒருங்குகுறி மென்பொருட்கள், தமிழ் ஒருங்குகுறி எழுதிகள், தமிழ்99 விசைப்பலகை இயக்கம், தமிழ் உள்ளீட்டுப் பயிற்சிக்கான வலைதளங்கள் ஆகியன குறித்து பயிற்சி அளிக்கப்பெறும்.

மதியம் நிகழவுள்ள இரண்டாம் அமர்வில் விக்கியூடகத் தொகுப்பு, திறவூற்று மூலங்கள், திறவூற்று அகரமுதலிகள், கலைக்களஞ்சியங்கள், திறவூற்று வலைதளங்கள், திறவூற்று மென்பொருட்கள் குறித்த பயிற்சிகள் அளிக்கப்பெறும்.இப்பயிலரங்கில்சேலம் நடுவண் சிறையின் அலுவலகப் பணியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.