சாவகச்சேரியில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு
ஞாயிறு, மார்ச் 28, 2010
- 17 பெப்ரவரி 2025: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது
- 17 பெப்ரவரி 2025: இலங்கை அரசு நியமித்த நிபுணர் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்த்தப்படுகிறது
- 17 பெப்ரவரி 2025: 157 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களும் நவூரு தீவுக்கு அனுப்பப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: ஈழத் தமிழ் அகதிகள் 157 பேரும் கொக்கோசுத் தீவுக்கு அழைத்து வரப்பட்டனர்
- 17 பெப்ரவரி 2025: தஞ்சமடையச் சென்ற தமிழ் அகதிகளை ஆத்திரேலியா இலங்கைக்கு திருப்பி அனுப்பியது
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் 13 நாட்களுக்கு நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி சங்கத்தானை டச்சு வீதியில் உள்ள எஸ். திருச்செல்வம் என்ற வர்த்தகரின் மகனே கடத்தப்பட்டவர். இது தொடர்பாக கடந்த புதன்கிழமை 16 வயதுடைய திருச்செல்வம் கபில்நாத் என்ற அந்த மாணவனுடன் பயிலும் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் ஒருவரின் வளவுக்குள் இருந்தே காணாமற்போன மாணவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாணவன் கபிலநாத் கடத்தப்பட்ட பின்னர் மூன்று கோடி ரூபா கப்பம் தருமாறு அவரின் பெற்றோர் அச்சுறுத்தப்பட்டனர் என்று யாழில் இருந்து வெளியாகும் உதயன் பத்திரிகை எழுதியுள்ளது.
மாணவன் காணாமல் போனதன் பின்னர் இது தொடர்பில் கடந்த தினம் ஒன்றில் அரசியல் கட்சியொன்றின் தென்மாராட்சிப் பொறுப்பாளர் ஒருவர் காவல்துறையினரால் விசாரணை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. அதேவேளை அவருடைய வாகன சாரதி தலைமறைவாகியுள்ளதாக யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல் கட்சித்தரப்புகளில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், “மாணவன் கபிலநாத்தின் படு கொலைக்கு மக்கள் தமது எதிர்ப்பைக் காட்டவேண்டும். கடத்தலுக்கும் கொலைக்கும் காரணமான சக்திகள் அடையாளம் காணப்படவேண்டும். அதற்கான விசாரணைகளை காவல்துறையினர் தொடங்கவேண்டும்”, என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா அறிக்கை விடுத்துள்ளார்.
மூலம்
தொகு- யாழ்.சாவகச்சேரியில் கைதுசெய்யப்பட்ட மாணவரின் வீட்டு வளவுக்குள் கடத்தப்பட்ட வர்த்தகரின் மகனின் சடலம், தமிழ்மிரர், மார்ச் 27, 2010
- யாழ். சாவகச்சேரியில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு, தமிழ்வின், மார்ச் 27, 2010
- அப்பாவி மாணவன் கபிலநாத் படுகொலை; மக்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டும் மாவை சேனாதிராசா வலியுறுத்துகிறார், உதயன், மார்ச் 28, 2010
- சாவகச்சேரியில் 13 நாள்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட மாணவன் நேற்றுச் சடலமாக மீட்பு! குடாநாட்டில் பெரும் பீதியும் பரபரப்பும்!!, உதயன், மார்ச் 28, 2010