தென்கொரிய அமெரிக்கத் தூதுவர் மீது கத்திக் குத்து
வெள்ளி, மார்ச் 6, 2015
தென் கொரியாவில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: வட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன
- 17 பெப்ரவரி 2025: ஈரானிய எண்ணெய் கப்பல் சீன சரக்கு கப்பலுடன் மோதியதில் 32 பேரை காணவில்லை
- 17 பெப்ரவரி 2025: சாம்சங் குழும அதிபர் ஊழல் குற்றச்சாட்டில் கைதானார்
- 17 பெப்ரவரி 2025: தென்கொரிய அமெரிக்கத் தூதுவர் மீது கத்திக் குத்து
- 17 பெப்ரவரி 2025: ஐ-போன் 6 மற்றும் சாம்சங் காலக்சி நோட் 4 வெளியிடப்பட்டுள்ளது
தென் கொரியாவின் அமைவிடம்
தென் கொரியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் மார்ட் லிப்பேர்ட் தலைநகர் சியோலில் நபரொருவரின் கத்திக் குத்துக்கு இலக்கானார். காலை விருந்துபசார நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது இச்சம்பவம் நடைபெற்றது.
தாக்குதல் நடத்தியவர் 55 வயது நிரம்பிய கிம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். "வடகொரியாவும் தென் கொரியாவும் இணைக்கப்பட வேண்டும்" எனக் கூச்சலிட்டவாறு கத்தியுடன் லிப்பேர்டை நெருங்கி வந்ததாகவும், போர்ப் பயிற்சிக்கு இடமில்லை எனக் கூறியவாறு தாகியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிசார் கிம்மை உடனடியாக மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
மூலம்
தொகு- தென் கொரிய தலைநகரில் அமெரிக்கத் தூதுவரை கத்தியால் வெட்டிக் காயப்படுத்திய நபரால் பரபரப்பு, வீரகேசரி,மார்ச்சு 06, 2015.
- South Korea: Man arrested after knife attack on US ambassador, யூரோ நியூசு, மார்ச்சு 05, 2015.
- அமெரிக்கத் தூதர் மீது தென் கொரியாவில் தாக்குதல் தினகரன், மார்ச்சு 05, 2015.