ஐம்பது புதிய புறக்கோள்கள் கண்டுபிடிப்பு
செவ்வாய், செப்டெம்பர் 13, 2011
- 17 பெப்ரவரி 2025: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது
- 17 பெப்ரவரி 2025: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு
- 17 பெப்ரவரி 2025: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது
- 17 பெப்ரவரி 2025: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது
- 17 பெப்ரவரி 2025: கலிலியோ செயற்கைகோள் செயல்பாட்டுக்கு வந்தது

சிலியில் உள்ள நுண்தொலைநோக்கி மூலம் எமது சூரியக் குடும்பத்துக்கு வெளியே முன்னெப்போதும் அறியப்படாத ஐம்பது புதிய புறக்கோள்களை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
புதிதாதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புறக்கோள்களில் 16 புறக்கோள்கள் எமது பூமியை விடப் பெரியதும், ஆனால் வியாழனை விட சிறியனவாகவும் உள்ளன. இவை "சூப்பர் ஏர்த்ஸ்" என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று உயிரிங்கள் வாழக்கூடிய வலயத்தினுள் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த தகவல்கள் அமெரிக்காவின் வயோமிங்கு மாநிலத்தில் இடம்பெற்ற ஒரு மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தகவல்கள் வானியல் மற்றும் வானியற்பியல் இதழில் வெளியிடப்படவிருக்கிறது.
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புறக்கோள்களில் 5 கோள்கள் பூமியை விட ஐந்து மடங்குக்கும் குறைவான பருமனைக் கொண்டுள்ளன. "உயிரினங்களைத் தேடும் பணி எதிர்காலத்தில் இக்கோள்களையே மையப்படுத்தி இடம்பெறும் என நாம் நம்புகிறோம்," ஜெனீவா வானியல் அவதான மையத்தைச் சேர்ந்த வானியலாளர் பிரான்செஸ்கோ பெப்பே தெரிவித்தார்.
சிலியின் லா சில்லா அவதானநிலையத்தில் வைக்கப்பட்டுள்ள 3.6 மீட்டர் நீள ஹார்ப்ஸ் என்ற நுண்தொலைநோக்கி மூலமே இத்தகவல்கள் பெறப்பட்டுள்ளன.
மூலம்
தொகு- Fifty new exoplanets discovered, பிபிசி, செப்டம்பர் 12, 2011
- New planet 'may support life', டெய்லி டெலிகிராஃப், செப்டம்பர் 13, 2011