தென் கொரியாவில் தயாரிக்கப்பட்ட செயற்கைக் கோளை சப்பான் ஏவியது
வெள்ளி, மே 18, 2012
- 17 பெப்பிரவரி 2025: நிலவில் தரை இறங்கிய ஐந்தாவது நாடானது சப்பான்
- 17 பெப்பிரவரி 2025: வட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன
- 17 பெப்பிரவரி 2025: ஜப்பானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: இதுவரை 34 பேர் பலி; 1000 பேர் படுகாயம்
- 17 பெப்பிரவரி 2025: ஜப்பான் நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கானோரை காணவில்லை
- 17 பெப்பிரவரி 2025: ஜப்பானில் அடுத்தடுத்து இரண்டு கடும் நிலநடுக்கங்கள்
வெளிநாடொன்றில் தயாரிக்கப்பட்ட செயற்கைக் கோள் ஒன்றை முதற்தடவையாக சப்பான் வணிகரீதியில் விண்ணுக்கு ஏவியுள்ளது.
தென் கொரியாவில் தயாரிக்கப்பட்ட கொம்ப்சாட்-3 என்ற இந்த செயற்கைக்கோள் எச்-2ஏ என்ற ஏவுகலம் மூலம் தெற்கு சப்பானின் தனிகசீமா தீவில் இருந்து இன்று அதிகாலை 1:39 மணிக்கு ஏவப்பட்டது. இது ஏவப்பட்டு 16 நிமிடங்களில் செயற்கைக்கோள் ஏவுகலத்தில் இருந்து பிரிந்தது. இதனுடன் செலுத்தப்பட்ட மேலும் மூன்று சப்பானிய செயற்கைக்கோள்கள் பின்னர் பிரிந்தன.
இதன் மூலம் விண்கலங்களை ஏவும் வணிக முயற்சியில் ஐரோப்பா, மற்றும் உருசியாவுடன் சப்பானும் தற்போது இணைந்துள்ளது. ஏவுகலத்தை 2007 ஆம் ஆண்டில் இருந்து இயக்கி வரும் மிட்சுபிஷி நிறுவனம் எதிர்காலத்தில் மேலும் பல வணிக செயற்கைக்கோள்களை ஏவும் பணியில் ஈடுபடவுள்ளது.
கொரிய விண்வெளி ஆய்வுக் கழகத்தினால் தயாரிக்கப்பட்ட கொம்ப்சாட்-3 (KOMPSAT-3) செயற்கைக்கோள் பல்நோக்கு அவதான நிலையமாகச் செயற்படும் என சப்பானிய விண்வெளி ஆய்வு நிலையம் (ஜாக்சா) தெரிவித்துள்ளது. ஜாக்சாவின் எச்-2ஏ ஏவுகலம் 21வது தடவையாக விண்வெளிக்கு ஏவப்படுகிறது.
மூலம்
தொகு- Japan launches first foreign-made commercial satellite, பிபிசி, மே 18, 2012
- Launch Result of the Global Changing Observation Mission, ஜாக்சா, மே 18, 2012