சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு தலைவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது ..!

ஆகஸ்ட் 1 2020 முதல் சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு தலைவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் இனி அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் என அழைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் என்றும், கோயம்பேடு  மெட்ரோ ரயில் நிலையத்திற்கு புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மூலம் தொகு

  • [1] TamilNews 24x7.com Friday, Jul 31,2020 ,10:57:43pm