ஏமனில் போராளிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையில் கடும் சண்டை

வியாழன், செப்டம்பர் 10, 2009, ஏடென், யேமன்:


ஏமனின் வடக்குப் பகுதிகளில் இடம்பெற்ற கடும் சண்டைகளில் 17 ஷியா முஸ்லிம் போராளிகள் கொல்லப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.


ஏமன் மலைப்பகுதிகளில் வலுவோடு இயங்கி வரும் ஷியா போராளிகளுக்கு எதிராக இராணுவம் தாக்குதல் நடத்தத் தொடங்கியிருப்பதால் அந்தப் பகுதியில் மிக பெரிய அளவிலான சண்டை மூண் டுள்ளது. போராளிகள் தமது முன்னைய நிலைகளுக்கு திரும்பியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.


சாடா எனும் பழைமை வாய்ந்த நகரில் ஔத்தி (Houthis) போராளிகளின் ஆதிக்கம் இருந்து வருகிறது. அந்தப் பகுதியில் பின்பற்றப்பட்ட போர் நிறுத்தம் சில மணி நேரத்திற்கே நீடித்தது. இந்த போர் நிறுத்தம் அரசாங்க தரப்பில் பின்பற்றப்பட்டது. ஆனால் சில மணி நேரத்திற்கு பின்பு கடந்த இரண்டு நாட்களாக அங்கு இராணுவத்தில் கவச வாகனங்கள் தங்களின் தீவிர தாக்குதலை கிளர்ச்சிக்காரர் களுக்கு எதிராக தொடக்கி உள்ளனர்.


ஷியா முஸ்லிம் சிறுபான்மை சமுகத்தினர் இராணுவத்திற்கு எதிராக தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக சாடா நகரில் கடைகள் மூடப்பட்டுவிட்டன. மக்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து வருகின்றனர்.


வட ஏமனில் இந்த சண்டையில் பலர் கொல்லப்பட்டு விட்டனர். பலர் காயமுற்றுள்ளனர் என்று இராணுவ அதிகாரிகள் கூறினர்.


கடந்த 3 வாரங்களாக அங்கு நடந்து வரும் சண்டையில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இருக்கின்றனர் என்று ஐநா கூறியுள்ளது. சாடா நகர மக்களுக்கு வெளியுலக தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதோடு உணவு பற்றாக்குறையும் அவர்கள் எதிர்நோக்கியுள்ளதாக ஐநாவின் பேச்சாளர் ஹிச்சாம் ஹசன் கூறினார்.

மூலம் தொகு