முஷாரப்பை நாடு கடத்துமாறு கோரும் பாகிஸ்தான் உளவுத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[மறுநோக்கு சோதிக்கப்படவில்லை][மறுநோக்கு சோதிக்கப்படவில்லை]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
இது குறித்து பேட்டியளித்த அவரது வக்கீல் முகமது அலி சயீப், “அவர் இந்த பிடியாணைக்காக பாகிஸ்தான் நீதிமன்றில் நேரில் ஆஜராக வாய்ப்பில்லை’ என்று தெரிவித்தார். இந்நிலையில், பாகிஸ்தான் புலனாய்வுத்துறை, வழக்கு விசாரணைக்காக, முஷாரப்பை லண்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு நாடு நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. பாகிஸ்தான் உள்நாட்டமைச்சர் ரெஹ்மான் மாலிக்கின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின்போதே முஷாரப்பை நாடு கடத்தக்கோரும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
சட்ட ரீதியில் நாடு கடத்தும் நடவடிக்கையில் சில சிக்கல்கள் இருப்பதால் இது குறித்து பிரித்தானியாவும் பாகிஸ்தானும் ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளவில்லை. அதனால் பாகிஸ்தா¡ன் உளவுத்துறை, முஷாரப்பை நாடு கடத்தும் படி, பிரித்தானியாவிடம் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில், தனது சட்டப்படி தான் பிரித்தானியா முடிவெடுக்கும் என சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.