எஸ் பி பாலசுப்ரமணியம் கொரோனா 2020

திரைப்பட பிண்ணணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம், ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில், எனக்கு சளி, காய்ச்சல் தொந்தரவு இருந்தது. மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டேன். அதில் மிகவும் குறைந்த அளவில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.

அதனால் மருத்துவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தினர். ஆனால் வீட்டில் குடும்பத்தினர் இருப்பதால் நான் மருத்துவமனையிலேயே அனுமதி ஆகியுள்ளேன். சளி, காய்ச்சலை தவிர மற்றபடி நான் நன்றாக உள்ளேன். நான் ஓய்வு எடுப்பதால் நிறைய கால்கள் எடுக்கமுடியவில்லை. நான் நலமாக இருக்கிறேன். உங்களின் அன்புக்கு நன்றி எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து எம்.ஜி.எம். மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், லேசான கொரோனா அறிகுறி இருந்ததால் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் எங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் நலமாக உள்ளார். எங்களது மருத்துவ குழு அவருக்கு சிறப்பான சிகிச்சை கொடுத்து வருகிறது. இயற்கையான முறையிலேயே அவர் மூச்சு விடுகிறார். தனக்காக பிரார்த்தனை செய்த தனது நலம் விரும்பிகள் அனைவருக்கும் எஸ்.பி.பி. நன்றி தெரிவித்துள்ளார், என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம் தொகு

  • [1] எப்படி இருக்கிறார் எஸ் பி பாலசுப்ரமணியம் : அறிக்கை வெளியிட்டது மருத்துவமனை.. | TamilNews 24x7.com Saturday, Aug 08,2020 ,07:09:29am