எத்தியோப்பியாவில் இரு சமூகத்தினரிடையே மோதல், 20,000 பேர் வெளியேறினர்
சனி, சூலை 28, 2012
எத்தியோப்பியாவில் இருந்து ஏனைய செய்திகள்
- 6 சனவரி 2013: எல்லைப்பகுதியில் இராணுவமயமற்ற வலயம் ஒன்றை அமைக்க இரு சூடானியத் தலைவர்களும் இணக்கம்
- 21 ஆகத்து 2012: எத்தியோப்பியப் பிரதமர் மெலெசு செனாவி காலமானார்
- 4 ஆகத்து 2012: 2012 ஒலிம்பிக்சு: எத்தியோப்பியாவின் திருனேசு டிபாபா 10,000 மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கம் பெற்றார்
- 28 சூலை 2012: எத்தியோப்பியாவில் இரு சமூகத்தினரிடையே மோதல், 20,000 பேர் வெளியேறினர்
- 13 சூலை 2012: எத்தியோப்பிய ஊடகவியலாளர் எசுக்கிண்டர் நேகாவிற்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை
எத்தியோப்பியாவின் அமைவிடம்
எத்தியோப்பியாவின் தெற்குப் பகுதியில் இடம்பெற்ற இனமோதல்களில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர்.
இனமோதலுக்கு அஞ்சி 20,000 பேர் வரையில் எல்லையைத் தாண்டி கென்யாவிற்குள் நுழைந்துள்ளதாக கென்ய செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.
நில உரிமைகள் தொடர்பாக மொயால் பிராந்தியத்தில் பொரானா மற்றும் காரி ஆகிய இனத்தவரிடையே சென்ற புதனன்று மோதல் ஆரம்பமானதாகவும் நேற்று வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆயுதம் தாங்கிய போராளிகள் இப்பிரதேசத்தின் பல கிராமங்களை புதன்கிழமை ஆக்கிரமித்ததாகவும், பின்னர் சண்டை எத்தியோப்பிய-கென்ய எல்லைப்பகுதிக்கும் பரவியதாக செய்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
மூலம் தொகு
- Ethiopia: 20,000 flee Moyale clashes - Red Cross, பிபிசி, சூலை 28, 2012
- 12 killed as communities clash at border, ஸ்டாண்டர்ட் மீடியா, சூலை 28, 2012