உகாண்டாவின் கிழக்கே நிலச்சரிவு, பலர் உயிரிழப்பு
செவ்வாய், சூன் 26, 2012
- 17 பெப்பிரவரி 2025: ஆப்பிரிக்கக் காடுகளில் 2013ஆம் ஆண்டில் 20,000 யானைகள் கொல்லப்பட்டுள்ளன
- 17 பெப்பிரவரி 2025: 2012 ஒலிம்பிக்சு மாரத்தான்: உகாண்டாவின் ஸ்டீவன் கிப்ரோட்டிச் தங்கப்பதக்கம் பெற்றார்
- 17 பெப்பிரவரி 2025: எபோலா நச்சுயிரி உகாண்டாவின் தலைநகருக்கும் பரவியுள்ளதாக எச்சரிக்கை
- 17 பெப்பிரவரி 2025: உகாண்டாவின் கிழக்கே நிலச்சரிவு, பலர் உயிரிழப்பு
- 17 பெப்பிரவரி 2025: புலப்படாத சிறுவர்களின் 'கோனி 2012' பரப்புரைக்கு பன்னாட்டு நீதிமன்ற வழக்குத்தொடுநர் ஆதரவு
உகாண்டாவின் கிழக்கே மலைப்பகுதி ஒன்றில் இடம்பெற்ற நிலச்சரிவை அடுத்து மூன்று கிராமங்கள் மூழ்கியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. பலர் உயிரிழந்துள்ளனர்.
18 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக உகாண்டா செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் பலர் இடிபாடுகளிடையே சிக்குண்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. புடூடா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 15 வீடுகள் நிலத்தில் புதையுண்டுள்ளன. மொத்தம் 300 பேர் வரையில் இக்கிராமங்களில் வாழ்ந்து வந்தனர். குறைந்தது 72 பேர் வரையில் உயிர் தப்பினர், இவர்கள் அனைவரும் சந்தைக்குச் சென்றவர்கள் ஆவர்.
கென்ய எல்லைக்கருகில் உள்ள எல்கோன் மலையை அண்டிய பகுதியிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. இப்பகுதியில் அண்மைக்காலமாக பெரும் மழை பெய்து வந்ததெனத் தெரிவிக்கப்படுகிறது.
எல்கோன் மலைப் பகுதியில் கோப்பிச் செய்கை காரணமாக காடுகள் அழிக்கப்பட்டு வருவதனாலேயே நிலச்சரிவுகள் இங்கு அடிக்கடி நிகழ்வதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். கடந்த ஆகத்து மாதத்தில் கிழக்கு உகாண்டாவில் புலாம்புலி மாவட்டத்தில் கிராமம் ஒன்று சேற்றில் அள்ளுண்டதில் 24 பேர் கொல்லப்பட்டனர். 2010 மார்ச் மாதத்தில் இடம்பெற்ற நிலச்சரிவில் 350 பேர் உயிரிழந்தனர்.
மூலம்
தொகு- Deadly landslide strikes eastern Uganda, பிபிசி, சூன் 25, 2012
- Uganda searches for survivors after deadly mudslide, டொச்சவெலா, சூன் 25, 2012