இந்தியாவின் திரிபுராவில் கிளர்ச்சியாளர்களால் 8 பேர் படுகொலை

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

புதன், நவம்பர் 11, 2009


இந்திய அரசிடம் சரணடைந்த தமது அமைப்பின் உறுப்பினர்களின் உறவினர்கள் 8 பேரை திரிபுரா தேசிய விடுதலை முன்னணியினர் கொன்றதாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் காவல்துறையினர் கூறுகிறார்கள்.


இலகுவில் சென்றடைய முடியாத கிராமமான புஸ்ரம்பராவுக்கு அருகே இடம்பெற்ற இந்தக் கொலைகள், கடந்த திங்களன்று 7 பேர் சரணடைந்ததற்கான பழிவாங்கலாகவே நடந்துள்ளன என்று திரிபுராவின் உயர் பொலிஸ் அதிகாரி பரனோய் சஹாய் கூறியுள்ளார்.


அந்தக் கிராமத்தில் இருந்து கடத்தப்பட்ட சிறிது நேரத்தில், இந்த 4 ஆண்கள் மற்றும் 4 பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.

மூலம்

தொகு